மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :18 ஜூலை 2015, 2:34 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இயேசு சிலை உடைக்கப்பட்டிருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் சாலையில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு எதிரே சிறுமலையில் புகழ்பெற்ற மாதா கோவில் உள்ளது. இங்கு ஏராளமான ஆர்.சி. திருச்சபை மக்கள் சென்று வழிபாடு நடத்துவர்கள்.

இங்குள்ள இயேசு சொரூபத்தில் உள்ள கை உள்ளிட்ட பாகங்களும் உடைக்கப்பட்டுள்ளது. மேலும் மாதாவிடம் ஒரு சிறுவன் பாத்திரத்தில் ஏதோ வாங்குவது போன்றுள்ள சொரூபத்தில், சிறுவனை உடைத்து கீழே தள்ளியுள்ளார்கள். இதில் தலை சேதமுற்றது.

இது குறித்து ஆர்.சி. தேவாலயத்தின் முக்கிய நிர்வாகியான புனிதன் கூறுகையில், போலீஸார் இயேசு சிலையை உடைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இயேசு சிலை உடைப்புச் சம்பவம் குறித்து அறிந்ததும், ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.