ரேசன் கடையில் முறைகேடு: விற்பனையாளர் பணியிடை நீக்கம்

விருதுநகர் மாவட்ட பகுதியில் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்ட பகுதியில் கூட்டுறவு நியாய விலைக்கடையில் முறைகேடு செய்த விற்பனையாளரை பணியிடைநீக்கம் செய்து இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

விருதுநகர் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் அரிசி, கோதுமை ஆகியவைகளை நுகர்வோர்களுக்கு விநியோகம் செய்யாமல் முறைகேடு செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.குருமூரர்த்தி தலைமையில் பறக்கும் படையினர் நியாய விலைக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், பொருள்களின் இருப்பு குறைவு, பதிவேடுகள் சரியான பராமரிப்பு செய்யாதது உள்பட பல்வேறு முறைகேடுகள் கண்டறிந்த, அக்கடைகளின் விற்பனையாளர்களுக்கு ரூ.28575 வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து கடும் முறைகேட்டில் ஈடுபட்ட காளையார்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாயவிலைக்கடை விற்பனையாளர் மீது நடவடிக்கைக்கு தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்படி நியாய விலைக்கடையின் விற்பனையாளர் மு.பாண்டியராஜன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com