பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எம்.பி.பி.எஸ்.: ஜூன் 15-இல் தரவரிசைப் பட்டியல் ரேண்டம் எண் வெளியீடு

தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் 15-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் கூறினார்

News image
Updated On :9 ஜனவரி 2024, 11:13 am IST

தமிழகத்தில் நிகழ் கல்வி ஆண்டில் (2015-16) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு வரும் 15-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் டாக்டர் உஷா சதாசிவம் கூறினார்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள அனைத்து 32,184 மாணவர்களுக்கும் வியாழக்கிழமை (ஜூன் 11) காலை 10.30 மணிக்கு ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும என்றும் அவர் தெரிவித்தார்.

ரேண்டம்  எண் ஏன்?

பிளஸ் 2 தேர்வில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய முக்கியப் பாடங்களான உயிரியல்-இயற்பியல்-வேதியியல் ஆகியவற்றின் மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தால் பிறந்த தேதியின் அடிப்படையிலும் ஒரே பிறந்த தேதியயைக் கொண்டவர்கள் போன்ற மாணவர்களை தரவரிசைப் பட்டியலில் வரிசைப்படுத்தவே ரேண்டம் எண் (சம வாய்ப்பு எண்) ஒதுக்கப்படுகிறது.

இணையதளத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களது ரேண்டம் எண்ணை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org

இல் வியாழக்கிழமை (ஜூன் 11) பிற்பகலில் தெரிந்து கொள்ள முடியும்.

தரவரிசைப் பட்டியல்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரித்து வெளியிடப்படும். மறுகூட்டல், மறு மதிப்பீடு ஆகியவற்றுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் மதிப்பெண்கள் அடங்கிய சி.டி.யை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் தேர்வுத் துறை வெள்ளிக்கிழமை (ஜூன் 12) அளிப்பதாகக் கூறியுள்ளது. சி.டி. கிடைத்தவுடன் மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண் சேர்க்கப்பட்டு எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் இரண்டு நாள்களில் தயாரிக்கப்படும். எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல் வரும் 15-ஆம் தேதி வெளியிடப்படும் என்று டாக்டர் உஷா சதாசிவம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.