இளைஞர்களிடையே ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையையும் வளர்க்கும் வகையில் கிராமங்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-கம்மாப்பட்டியில் நடைபெற்றது.
விழாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து தலைமை தாங்கினார்.
கிரிக்கெட் போட்டியில் முதலிடம் பெற்ற நடுவப்பட்டி மாரிமுத்து என்பவர் தலைமையிலான அணிக்கு கேடயம் மற்றும் ரூ.8 ஆயிரம் ரொகக்ப் பரிசை காவல் துணைக் கண்காணிப்பாளர் கே.முரளிதரன் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இரண்டாம் இடம் பெற்ற திருத்தங்கல் முத்துக்குமார் என்பவர் தலைமையிலான அணிக்கு ரூ.4 ஆயிரம் மற்றும் கேடயத்தை, காவல் ஆய்வாளர் இளவரசன் வழங்கி வாழ்த்துரையாற்றினார்.
மூன்றாம் இடம் பெற்ற கம்மாப்பட்டி முருகன் என்பவர் தலைமையிலான ?அணிக்கு கேடயம் மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கி ஒன்றியக் குழுத் தலைவர் கி.காளிமுத்து வாழ்த்துரை வழங்கினார்.
நிகழச்சியில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.