டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பேருந்தில் சிக்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.9.51 லட்சம் இழப்பீடு வழங்க அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவு

அரசுப் பேருந்தில் சிக்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.9,51, 110 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :19 ஜூன் 2015, 12:38 pm

கோ.ஜெயக்குமார்

அரசுப் பேருந்தில் சிக்கி உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.9,51, 110 இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சுந்தரபாண்டியம், புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (49). இவர் 19.10.12-ம் தேதி சுந்தரபாண்டியம் பேருந்து நிலையத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறும்போது தவறி விழுந்துள்ளார். ஓட்டுநர் குன்னூர் முத்தையா, இதனை அறியாமல் அஜாக்கிரதையாக பேருந்தை நகர்த்தி சென்றுள்ளார். இதில் பேருந்து சுந்தர்ராஜ் மீது ஏறி அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து பலியானவரின் மனைவி வீரலட்சுமி (45), இவர்களின் மகள் முருகேஸ்வரி (22) ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜான் ஆர்.டி.சந்தோஷம், மதுரை கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழகம், உயிரிழந்தவரின் வாரிசுதாரருக்கு ரூ.9,51,110 வழங்க உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.