டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பு ஆண்டு புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூன் 2015, 6:15 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பு ஆண்டு புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் பேசுகையில் கூறியதாவது: யோகாசனம் மனதை ஒரு நிலைப்படுத்தி, நல்ல ஞானகசக்தி, நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மனதும் உடலும் நமது கட்டுப்பாட்டுக்குள் வருவதால், நாம் எந்தநிலையிலும், எந்த வயதிலும் வளைந்து கொடுத்துச் செல்லலாம். உடலும் வளைந்து கொடுக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் உள்பட ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.