தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

புற்றுநோயாளிகளுக்கு தலை முடி தானம் தரும் நிகழ்ச்சி

புற்றுநோயாளிகள் பயன்பாட்டுக்கு தலைமுடியை தானம் வழங்கும் விழா சென்னையை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள

News image
Updated On :4 மார்ச் 2015, 12:44 pm

புற்றுநோயாளிகள் பயன்பாட்டுக்கு தலைமுடியை தானம் வழங்கும் விழா சென்னையை அடுத்த கீரப்பாக்கத்தில் உள்ள பிளஸ்ஸிங்ஸ் பள்ளியில் சனிக்கிழமை மார்ச் 7ம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து பள்ளியின் முதல்வர் சோபியா ரேச்சர் மேரி சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

புற்றுநோயாளிகள் கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ளும்போது அவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு செயற்கை முடியை தயாரித்து வழங்குவதற்காக முடிதானம் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

முடியை தானம் செய்ய விரும்புவர்கள் இதில் கலந்து கொண்டு தானமளிக்கலாம். பள்ளியின் மூலம் மாணவர்களின் பெற்றோர், பள்ளியின் சுற்றுப்புறங்களில் உள்ள கிராம மக்கள் ஆகியோருக்கும் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 300 பேர் இதில் தங்கள் தலைமுடியை தானமளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடையாறு புற்றுநோய் மருத்துவமனையுடன் இணைந்து க்ரீன் டிரென்ட்ஸ் சலூனின் உதவியுடன் தலைமுடி சேகரிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தானத்தை அளிக்கலாம். பள்ளி மாணவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.