தமிழக கலாச்சாரம், கட்டிடக்கலை, இந்து சமயம், மனித நடத்தை, சைவம், வைணவம் போன்றவை பாடப்பிரிவுகளாக உள்ளது. தற்போது நவீனமயமாதலுக்கு ஏற்ப கணினியும் ஒரு பாடப்பிரிவாக உள்ளது. இதில் முதுகலை பட்டப்படிப்பும் உள்ளது. சுமார் ஐம்பது ஆண்டுகாலப் பெருமை உள்ள இந்த பாடப்பிரிவுக்கு தற்போது ஆசிரியர் தேர்வு எழுதுவதற்கான தகுதி இல்லாத நிலை நீடித்து வருகிறது. பி.ஏ., பி.எஸ்சி., போன்ற பட்டப்பிரிவில் ஏராளமான பிரிவுகளை படித்தவர்களுக்கு கூட ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பு வழங்கி வரும் நிலையில் இந்தியப்பண்பாடு கேட்பாரற்று உள்ளது. இந்த பாடப்பிரிவை படித்த நூற்றுக்கணக்கானோர் ஆசிரியராகும் கனவு தகர்ந்த நிலையில் சோகத்தில் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட பி.ஏ., டூரிஸம் பாடம் படித்தவர்கள் பி.ஏ., வரலாறுக்கு இணையானதாக படித்தவர்களாக கருதி ஆசிரியர் தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதை பல்கலைக்கழகங்கள் எதற்கு இணையானது என்று தெரிவிக்காமல் உள்ளது. அரசியல்வாதிகள், ஆன்மீகவாதிகள் என அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்க்கலாச்சாரம், இந்தியப்பண்பாடு ஆகியவை இருந்தால் மட்டுமே உலகில் இந்தியா முன்னேறும் என முழக்கம் மட்டும் இடும் நிலையில் இந்தப்பாடப்பிரிவு கேட்பாரற்று உள்ளது.