காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

லஞ்சம் வாங்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார்

வழக்கை சாதகமாக முடித்துத் தருவதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ரூ.1,500 லஞ்சமாக

News image
Updated On :9 ஜனவரி 2024, 10:29 am IST

வழக்கை சாதகமாக முடித்துத் தருவதாகக் கூறி, குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ரூ.1,500 லஞ்சமாக வாங்கிய காவல்துறை உதவி ஆய்வாளர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அகிலாங்கரை மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (45). இவர் அப்பகுதியில் மனித உரிமை அமைப்பு ஒன்றை நடத்தி, அந்த அமைப்பை தவறாகப் பயன்படுத்தி ஏமாற்றி வந்ததாக வல்லம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதன் பேரில் சேகர் மீது வல்லம் போலீசார் பிப்ரவரி 7ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் பெறுவதற்கு முதல் தகவல் அறிக்கை தருவதற்கும், பின்னர் வழக்கை சாதகமாக முடித்துத் தருவதாகவும் அதற்கு ரூ.1,500 லஞ்சம் வேண்டும் என்றும் சேகரிடம் காவல்துறை உதவி ஆய்வாளர் பிரபாகரன் கேட்டுள்ளார்.

இதன்படி, தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த பிரபாகரனிடம், சேகர் ரூ.1,500 கொடுத்தார். இதனை வாங்கிக் கொண்ட பிரபாகரனை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.