விராலிமலை அருள்மிகு மெய்கண்ணுடையாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும், வருடம் தோறும் இங்கு சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம், நிகழாண்டுக்காண விழா கடந்த ஏப்ரல், 28- ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை என இருவேளைகளில் அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் 8- ம் நாளான செவ்வாய்க்கிழமை, கோயில் முன்னாள் அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில்( தீ குண்டம்) நூற்றுக்கணக்காண பக்தர்கள் தலையில் பால்குடம் சுமந்து வந்து தீமிதித்து வேண்டுதல் நிறைவேற்றினர். அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டி, அங்கபிரதட்ச்சனம், பால்குடம் உள்ளிட்ட வழிபாடுகள் நடத்தினர்.