மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலை நான்கு வழிச்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து: முதியவர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

News image
Updated On :14 மே 2015, 5:59 am

சி. உதயகுமார்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை- மதுரை நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

விராலிமலை அருகே உள்ள வளநாடு கும்பக்கோன்களத்தை சேர்ந்தவர் மாதக்கோனார் மகன் சின்னையா(65) விவசாய வேலை செய்து வரும் இவர் வியாழக்கிழமை அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் விராலிமலை-மதுரை நான்கு வழிச்சாலை வழியாக காளப்பனூர் பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது, இதில் தலையில் பலத்த காயமடைந்த சின்னையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந. புகழேந்தி கார் ஓட்டுநர் மதுரையைச் சேர்ந்த க. ராஜ்குமாரை(58)  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.