பங்குச் சந்தை: இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 65.53 ரூபாயாக உள்ளது.
Updated on
1 min read

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து 65.53 ரூபாயாக உள்ளது.

 அந்நிய செலாவணி சந்தையில் ஏற்றுமதியாளர்கள், மற்றும் வங்கிகளால் அமெரிக்க டாலர் விற்பனை அதிகரித்ததால் ரூபாயின் மதிப்பு சற்று உயர்ந்து காணப்பட்டது. ஆனால் உள்நாட்டுச் சந்தையில் பிறநாட்டு நாணயங்களை விட அமெரிக்க டாலர் மதிப்பு அதிகரித்து காணப்பட்டது.

மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 207 புள்ளிகள் உயர்ந்து 26,797.79-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 31.44 புள்ளிகள் உயர்ந்து 8,109.50-ஆகவும் இருந்தன.

இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், உலோகம் உள்ளிட்ட நிறுவன பங்குகளில் நல்ல முன்னேற்றம் காணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com