அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கார் மரத்தில் மோதி ஒருவர் சாவு: நால்வர் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டி வந்து, கார் மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நால்வர் காயம் அடைந்தனர்.

News image
Updated On :22 நவம்பர் 2015, 6:26 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் காரை ஓட்டி வந்து, கார் மரத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் நால்வர் காயம் அடைந்தனர்.

விருதுநகர், ஐ.சி.ஐ. காலனி, வாடியான் தெருவைச் சேர்ந்தவர் தங்கம் மகன் பாலாஜி (எ) நாகராஜ் (31). இவரது அக்காள் கணவர் சென்னை, நங்காநல்லூர் எஸ்.ஐ.டி. காலனியைச் சேர்ந்த தீனதயாள் மகன் சிவராஜ், மற்றும் உறவினர்கள் விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ராகுல் (16), முருகன் மகன் சூரியா (எ) ஜெகதீஸ் (22) ஆகியோர் காரில் குற்றாலம் சென்றுள்ளார்கள். காரை உறவினரான முருகேசன் மகன் சிவராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குற்றாலத்திலிருந்து விருதுநகர் திரும்புவதற்காக, ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் எம்.பி.கே.புதுப்பட்டி விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது, கார் சாலை ஓரம் இருந்த மரத்தில் மோதியது.

இதில் வண்டியில் பின்னால் அமர்ந்து வந்த பாலாஜி (எ) நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் வந்த ஏனைய நால்வரும் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடைபெற்றபோது, காரை ஓட்டி வந்தவர் உள்ளிட்ட அனைவரும் மது போதையில் இருந்ததாக போலீஸார் கூறினர். இது குறித்து வன்னியம்பட்டி போலீஸார் காரை ஓட்டி வந்த சிவராமகிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.