லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க  மாவட்ட பேரவை கூட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 செப்டம்பர் 2015, 10:47 am

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ச.முருகேசன் தலைமை வகித்தார். இப்பேரவையில் இதுவரையில் நடந்த வேலை அறிக்கையினை மாவட்ட செயலாளர் நா.புகழேந்தியும்,  மாவட்ட பொருளாளர் நா.சீத்தராமன் வரவு, செலவு அறிக்கையினையும் தாக்கல் செய்தனர்.

இப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கதத்தின் மாவட்ட தலைவர் முத்துராஜ், மாநில செயலாளர் ச.இ.கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேசினார்கள். இதில், மாவட்ட நிர்வாகிகள் ம.கதிரேசன், பாண்டீஸ்வரன், மீ.பத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில், ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதிய மாற்ற அரசானையினை மானிய கோரிக்கையில் அறிவிக்க வேண்டும். கணினி இயக்குநர்களை நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும், அனைத்து நிலைகளிலும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் நிறைவுரை வழங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் மை.பாலகுரு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.