விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சூடான பால் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், செம்மேடு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் வீ.நாகராஜ் (47), தொழிலாளி. இவா் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி மதுபோதையில் வீட்டில் விறகு அடுப்பில் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்துள்ளாா்.
அப்போது, நிலை தடுமாறியதில் நாகராஜ் உடல் மீது சூடான பால் கொட்டிவிட்டதாம். இதில் பலத்த காயமடைந்த அவரை விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகராஜ், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கஞ்சனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

இளைஞா் விஷமருந்தி தற்கொலை
காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: 3 போ் கைது

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


