4.5.2013-ஆம் தேதி தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக, பிரேம்குமாரை தொடர்பு கொண்டுள்ளார்கள். அவர் தனது கடலை உடைக்கும் மில்லில் வசூலான தொகை ரூ.80 ஆயிரத்துடன் இருந்துள்ளார். அங்கு சென்று, அவரை மோட்டார் சைக்கிளில் சிவரஞ்சித் அழைத்துக் கொண்டு, வழக்கமாக தென்றல் நகரில் உள்ள ஒரு மொட்டை மாடியில் மது குடிக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே சக்திகுமார் இருந்துள்ளார். பிரேம்குமாருக்கு மதுவில் டயோசிபேம் என்ற தூக்க மாத்திரையைக் கலந்து கொடுத்துள்ளார்கள். இதில் பிரேம்குமார் மயக்கமுற்றுள்ளார். பின்னர் ஒரு ஆம்னி வேனில், சிவரஞ்சித்திற்குச் சொந்தமான முதுகுடி சிட்கோவில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார்கள். அங்கு ஒரு அறையில் பிரேம்குமாரை அடைத்து வைத்திருந்துள்ளார்கள். பிரேம்குமார் நிலைமையைக் கண்டு, தங்களது திட்டம் வெளியே தெரிந்துவிடும் என்று அஞ்சி, தெர்மோ கேபிள் வயரைக் கொண்டு பிரேம்குமார் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார்கள். பின்னர் தயாராக தோண்டி வைத்திருந்த குழியில் அவர் அணிந்திருந்த ஆடைகளைக் கழற்றிவிட்டு சடலத்தை உள்ளே வைத்து சிமெண்ட் கலவை கொண்டு மூடியுள்ளார்கள். பின்னர் ஆடைகள், கேபிள் வயர் உள்ளிட்டவற்றை ராஜபாளையம்-திருநெல்வேலி சாலையில் உள்ள கோதைநாச்சியார்புரம் விலக்கில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார்கள்.