ஸ்ரீவில்லிபுத்தூரில் 123 பள்ளிகளைச் சேர்ந்த 9800 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கும் விழா
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சரகத்தில் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள 123 பள்ளிகளுக்கு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா புதன்கிழமை நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.விழாவிற்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் செ.பாலமுருகன் தலைமை தாங்கினார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி முன்னிலை வகித்தார்.









