ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

வங்கிகளில் இன்று முதல் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும்

தமிழகத்தின் பெரும்பாலான வங்கிகளில் இன்று முதல் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :24 நவம்பர் 2016, 6:41 am

DIN

தமிழகத்தின் பெரும்பாலான வங்கிகளில் இன்று முதல் 500 ரூபாய் நோட்டுகள் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள 500 ரூபாய் நோட்டுகள், தமிழகத்தில் முதன்முதலாக சேலத்தில் உள்ள தனியார் வங்கியான கரூர் வைஸ்யா வங்கியில் நேற்று விநியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் ஒரு மணி நேரத்தில் பணம் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், மாநிலத்தின் அனைத்து வங்கிகளுக்கும் 500 ரூபாய் நோட்டுகள் வந்திருப்பதாகவும், அவை இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் பணத்தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும் என்றும் கூறியுள்ளனர்.

இதேபோல், புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் வகையில் பெரும்பாலான ஏடிஎம்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் ஏடிஎம் மூலமும் பெற முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.