ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள அரசு அலுவலகத்தை இன்று தீயிட்டு எரித்த பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
காஷ்மீரின் பாம்போர் என்ற இடத்தில் மாநில அரசுக்கு சொந்தமான தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிலகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு கருதி உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
தீப்பற்றி எரியும் அந்த கட்டிடத்தில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதாக அப்பகுதியை சேர்ந்த ஒரு ராணுவ வீரர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாகவும், இதில் ராணுவ வீரர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கட்டிட வளாகத்தில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதே கட்டிடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் பாதுகாப்பு படைகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையில் தொடர்ந்து 48 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போரை நிறுத்த 30 நாள்களுக்குள் தீர்வு: அமெரிக்காவை முடிவெடுக்கச் சொல்லும் ஈரான்!
ஸ்ரீதர் - நான் சந்தித்த பிரபலங்கள் - 56

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK

டி-மார்ட் 4வது காலாண்டு நிகர லாபம் 19.2% உயர்வு!
வீடியோக்கள்

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

நாளை தீர்ப்பு ...யாருக்குச் சாதகம் ? | TN Election Results 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு


