ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

ஜாதவுக்கு பாகிஸ்தான்  தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி
Published on
Updated on
1 min read

சென்னை: ஜாதவுக்கு பாகிஸ்தான் தண்டனை அளித்தால் இந்தியா, பலூசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும்’ என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியருக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட்டால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று முன்னதாக அறிவுறுத்தியிருந்தார்.இதையடுத்து 

இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த சுப்பிரமணியன் சுவாமி, ‘இந்தியா, பாகிஸ்தானை கடுமையாக எச்சரிக்க வேண்டும். இந்தியர்களுக்கு எதிராகச் செயல்பட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’, என்றார்.

குல்பூஷன் ஜாதவ் மீதுள்ள ’ரா பிரிவு உளவாளி’ என்ற குற்றச் சாட்டை, இந்தியா முதலில் இருந்தே மறுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com