சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் துணை சபாநாயகர் தலைமையில் இன்று அவை நடந்தது.
இன்றைய கேள்வி நேரத்தின் போது உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க திமுக ஒத்துழைப்போடு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பேரவையில் திமுக எம்எல்ஏ துரைமுருகன் கேள்விக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.