பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடி எரிப்பு: 12 பாஜகவினர் கைது

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :24 மார்ச் 2017, 12:45 pm

தினமணி

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 12 பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.
தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறப்பைக் கண்டித்து திண்டாமை ஒழிப்பு முன்னணி, இளைஞர் பெருமன்றம் சார்பில் நடைபெற்ற போராட்டங்களில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இதற்கு பதிலாக நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தின் போது இரு கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளையும் அக்கட்சியினர் எரித்ததாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியகடை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் போலீஸார் நடத்திய சமரசப் பேச்சைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.

இதனை தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த 12 பேரை பெரியக்கடை போலீஸார் கைது செய்தனர். பாஜகவினர் 12 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவராதபடி வழக்குப்பதிவு செய்த பெரியக்கடை போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.