

மகள் திருமணத்திற்கு 6 மாதம் பரோல் கோரிய நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு பரோல் வழங்க கூடாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தொடர்ந்தார். நளினிக்கு பரோல் வழங்கினால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
மேலும் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. நளினி செய்த குற்றம் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றமாகும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது மகள் திருமணத்துக்காக 6 மாதம் பரோல் கேட்டு நளினி வழக்கு தொடர்ந்தார். நளினிக்கு பரோல் வழங்கினால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளது என்று தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
மேலும் நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மனுவில் குறிப்பிட்டுள்ளது. நளினி செய்த குற்றம் அனைத்து நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய குற்றமாகும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.