பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

விமர்சனங்கள் இருந்தாலே இந்தியா ஒளிரும்: மெர்சல் படம் குறித்து கமல்ஹாசன் கருத்து

மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து 

News image
Updated On :21 அக்டோபர் 2017, 3:07 am

DIN

மெர்சல் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் கமல்ஹாசன் மெர்சல் படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

தடைகள் பலவற்றைக் கடந்து மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன. 

இந்நிலையில், படத்தில் ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்க வேண்டும் என கூறிவரும் பாஜக தலைவர்கள் படத்தில் வெளியாகும் காட்சிகளுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “மெர்சலுக்கு சான்றளிக்கப்பட்டுள்ளது. அதை மறு சான்றளிக்க வேண்டாம். எதிர் விமர்சனங்களை தர்க்க ரீதியாக எதிர்கொள்வோம். விமர்சனங்களை அடக்காதீர்கள். விமர்சனங்கள் இருந்தாலே இந்தியா ஒளிரும்,” என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.