மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாரத் பந்த் எதிரொலி: ம.பி.யில் 7 பேர் பலி; ரயில்சேவை பாதிப்பு

வட மாநிலங்களில் நடைபெற்ற பாரத் பந்த் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள்

News image
Updated On :3 ஏப்ரல் 2018, 5:53 am

வட மாநிலங்களில் நடைபெற்ற பாரத் பந்த் எதிரொலியால் 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாகக் கூறி மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்று திங்கள்கிழமை(ஏப்.2) பல்வேறு தலித் அமைப்புகள் சார்பில் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில், வன்முறை மூண்டதை அடுத்து, துப்பாக்கிச் சூடு மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

வன்முறை பரவுவதைத் தடுக்க செல்லிடப்பேசி மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. ரயில் மறியல் போராட்டத்தால் வட மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சாலைகள் வன்முறைக் களமாகக் காட்சியளித்தன. முன்னதாக, பல்வேறு இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர், பிண்ட் மற்றும் மொரீனா மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் பிரிவினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 4 பேர் தலித் பிரிவைச் சேர்ந்தவர்கள், இருவர் தாக்குர் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்களும் தொடர இருப்பதாக பல்வேறு கட்சியினர் அறிவித்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

பல ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் பல ரயில்கள் மாற்றுப்பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.