திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் உயர்வு

பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளில் நிலைப்பெற்றது. 

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 6:56 pm IST

பங்குச் சந்தையில் இன்று வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 577 புள்ளிகள் உயர்ந்து 33,596.80 புள்ளிகளில் நிலைப்பெற்றது. 

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 10,325.15. புள்ளிகளில் உள்ளது. இதைபோல் டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், எச்.யு.எல், டிசிஎஸ், என்டிபிசி, விப்ரோ, ரிலையன்ஸ், சன் பார்மா, எச்டிஎஃப்சி, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 3.67 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், டாடா மோட்டார்ஸ், எம் & எம், மாருதி சுசூகி மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்களின் பங்குகள் 3.11 சதவீதம் அதிகரித்துள்ளன. இன்று வர்த்தகம் துவங்கும் பொழுதே சென்செக்ஸ் ஏற்றத்துடன் தொடங்கியது.

ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கும் குறுகிய கால வட்டிவீதம், வங்கிகளில் டெபாசிட் சீட்டுகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் வட்டி கொள்கை வட்டி வீதம் ஆகியவைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று நாணயக் கொள்கை கமிட்டியின் உறுப்பினர்கள் இன்று முடிவு செய்தனர். இந்த முடிவு பங்குசந்தைக்கு ஊக்கம் தந்தது. அதனால் குறியீட்டெண்கள் உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.