டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

10ம் வகுப்பு ஆங்கிலப் பாடத்திற்கு கருணை மதிப்பெண் வழங்கப்படும்: சிபிஎஸ்இ அறிவிப்பு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆங்கிலம் பொதுத் தேர்வு எழுதிய 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்ணாக 2 மதிப்பெண்கள் கூடுதலாக  

News image
Updated On :30 ஜனவரி 2024, 12:48 pm

DIN

புதுதில்லி: சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான கேள்வித் தாளில் பிழை இருந்ததை அடுத்து, மாணவர்களுக்கு சலுகையாக 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என மத்திய கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வு கடந்த மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கேள்வித் தாளில் உள்ள 2 மதிப்பெண்களுக்கான பிரிவு- ஏ-ன் மூன்றாவது கேள்வியில் எழுத்துப் பிழை இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அதுதொடர்பாக சில ஆசிரியர்களும், மாணவர்களும் சிபிஎஸ்இ தரப்பிடம் முறையிட்டனர். சிபிஎஸ்இ தரப்பில் அவர்கள் இணையவழி மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தனர்.

சிபிஎஸ்இ அதை கவனத்தில் கொண்ட நிலையில், தட்டச்சு பிழை காரணமாக மாணவர்கள் எந்தவொரு இடையூறையும் சந்திக்கக் கூடாது என்பதே சிபிஎஸ்இ கொள்கையாகும். எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தேர்வை எதிர்கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் 2 மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்துள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை பரிசீலித்த சிபிஎஸ்இ நிர்வாகம், எழுத்துப் பிழை ஏற்பட்ட குறிப்பிட்ட அந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

மே கடைசி வாரத்தில் 2018 பத்தாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.