

சென்னை: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டும் பதில்வராத நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5 மணியளவில் சந்தித்து பேசுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
காவிரி விவகாரம் குறித்து பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு பதில் வராத நிலையில் முதல்வர் பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். சந்திப்பின்போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்தக் கோரிக்கை வைப்பார் என தெரிகிறது.
காவிரி விவகாரம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மே 3-ஆம் தேதி தீர்ப்பு வரும் நிலையில் ஆளுநர் - முதல்வர் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.