புதுதில்லி: கோவையில் இருந்து செயல்படும் தனியார் ஏஜென்சி அளித்த போலி சான்றிதழ்களால் ஆஸ்திரேலியாவிற்கு சென்ற 22 இந்திய மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் எம்பிஏ படிப்பதற்கும், வேலை பார்ப்பதற்காகவும் சென்ற தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 பேரின் விசாவை அந்நாட்டு அரசு செய்துள்ளதால் தமிழகம், கேரளாவை சேர்ந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தவித்து வருகின்றனர்.
அவர்களுக்கு கோவை தனியார் ஏஜென்சி போலி தேசிய அங்கீகார வாரிய சான்றிதழ்களை வழங்கி அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாங்கள் அசல் சான்றிதழ்களை கொடுத்த நிலையில் போலி சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக மற்றும் கேரளாவைச் சேர்ந்த 22 பேரும் அளித்த சான்றிதழ்கள் போலியானது என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், ஆஸ்திரேலிய நிர்வாகம் இந்திய மாணவர்களின் விசாவை ரத்து செய்துள்ளது. இதனால் மாணவர்கள் ஆஸிதிரேலியாவில் தவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியில், கழிவுநீர் கால்வாயாக மாறுகிறதா கொசஸ்தலை ஆறு? - பாஜக

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக குறைவு!

முதல் நாளில் 69% சந்தா பதிவு செய்த லலிதா ஜூவல்லரி ஐபிஓ!

ஆசிய கோப்பை, ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |



