நெய்வேலி: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
நெய்வேலி புதுநகர் 27-வது வட்டம் என்.எல்.சி. திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்ற கட்சியின் நிர்வாகி திருமணத்தில் திருமாவளவன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பின் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் கருதுகின்றனர்.
அரசியல் வெற்றிடத்தை நிரப்ப நடிகர் என்ற கவர்ச்சி மட்டுமே போதும் என நடிகர்கள் நினைக்கின்றனர். தன்னால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என ஒவ்வொருவரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் என கூறினார்.
மேலும், தனது கட்சியில் சேர விரும்புவோர் எந்த சாதி அமைப்பிலும் இருக்க கூடாதென ரஜினி தெரிவித்தது வரவேற்கத்தக்கது. இதை ரஜினிகாந்த் இறுதியாக செயல்படுத்தினால் நான் மகிழ்ச்சி அடைவேன் என திருமாவளவன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவிநாசி அருகே பைக் மீது கார் மோதி விபத்து: தாய், குழந்தை பலி

முதல் டெஸ்ட்: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 460 ரன்கள் குவிப்பு!

தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலை

பெத்லகேம் குடும்ப யூனிட் - 110 நாள்கள் நடைபெற்ற படப்பிடிப்பு!
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK



