நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போராவில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

பந்திப்போரா: ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போராவில் பாதுகாப்பு படையினரால் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பதுங்கி உள்ள மேலும் 2 பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டுள்ளனர். 

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டம் ஹஜின் என்ற இடம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர், அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

இந்த என்கவுன்டரில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், பதுங்கி உள்ள மற்ற பயங்கரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் தொடர் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அப்பகுதியில் 3 முதல் 4 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்க கூடும் என கூறப்படுகிறது. 
 
நேற்று அனந்த்நாக் மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தளபதி உள்பட இரு பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினர்  நடத்திய என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். அதையடுத்து சில மணி நேரத்தில் சோபியான் மாவட்டத்தின் அரஹாமா பகுதியில், வாகனத்தை பழுது பார்த்துக் கொண்டிருந்த போலீஸாரை பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக சுட்டனர். 

இதில், சம்பவ இடத்திலேயே 2 பேர்  உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் இஷ்பாஃக் அகமது மிர், ஜாவீது அகமது பட், முகமது இக்பால் மிர் மற்றும் அடில் மன்சூர் பட் ஆகியோர் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.

முன்னதாக, அனந்த்நாக் மாவட்டத்தின் முனிவார்ட் கிராமத்தில் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதி அல்தாஃப் அகமது  தார் என்னும் அல்தாஃப் கச்ரோ மற்றும் ஒமர் ரஷித் வானி ஆகிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.