விழிப்புணர்வு: உயிர்ப் பன்மை பாதுகாப்பு குறித்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள், தொண்டு நிறுவனங்கள் மூலம் மலையடிவார கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மரங்களின் பயன்கள், வனவிலங்குகள், பறவைகளால் ஏற்படும் நன்மைகள், மரங்களை அழிப்பதால் ஏற்படும் வறட்சி, இயற்கை சீற்றம் போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. காடுகள் நம் சொத்து, காடுகளை பாதுகாக்க வேண்டியது நம் அனைவருடைய கடமை என்ற எண்ணம் மலையடிவார மக்களின் மனதில் விதைக்கப்பட்டது.