சம்பாவத்: உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டம் சவாலா பகுதியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் காரில் பயணம் செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர்.
பித்தோராகர்விலிருந்து தனக்க்பூர் சென்ற கார் இன்று காலை சவாலா பகுதியில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த உள்ளூர் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் உத்தரவிட்டுள்ளார்.