நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கோவையில் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை

கோவையில் ஆயுதப்படை காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த அமர்நாத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள

News image
Updated On :23 ஜூலை 2018, 11:16 am IST

கோவை: கோவையில் ஆயுதப்படை காவல்படை காவலராக பணிபுரிந்து வந்த அமர்நாத் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் காவல்துறையை சேர்ந்தவர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்தவர் அமர்நாத் (25). இவர் கோவை மாவட்டம் கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4-வது பட்டாலியனில் போலீஸ்காரராக கடந்த 2016-ஆம் ஆண்டில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று பணி முடிந்து தனது அறைக்கு சென்றவர் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கினார். இன்று காலை தூங்கில் தொங்கிய நிலையில் அமர்நாத்தை பார்த்த சக போலீஸ்காரர்கள் உயர் அதிகாரிகளுக்கும், குனியமுத்தூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அமர்நாத் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

அமர்நாத் தற்கொலைக்கு பணி சுமையா அல்லது தனிப்பட்ட பிரச்னை காரணமா என்றும் திருமணமாகாதவர் என்பதால் காதல் விவகாரம் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறன்றனர்.   

தமிழகத்தில் சில மாதங்களாக காவல்துறையை சேர்ந்தவர்கள் தற்கொலை செய்துகொண்டு வரும் சமபவம் அனைவரும் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.