வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

செங்கம் அருகே 8 வழிச்சாலை பணிக்கு கற்கள் பதிக்கவிடாமல் தடுத்த 4 பேர் கைது

செங்கம் அருகே 8 வழிச் சாலை பணிக்கு கல் பதிக்க விடாமல் தடுத்த 4 பேரை போலீஸார் கைது செய்து பணியை தொடங்கினா்.

News image
Updated On :23 ஜூலை 2018, 3:43 pm IST

செங்கம்: செங்கம் அருகே 8 வழிச் சாலை பணிக்கு கல் பதிக்க விடாமல் தடுத்த 4 பேரை போலீஸார் கைது செய்து பிறகு பணி தொடங்கினா். செங்கம் அடுத்த நீப்பத்துறை முதல் நயம்பாடி வரை செங்கம் தாலுக்காவிற்கு உள்ளிட்ட பகுதியில் சேலம் - சென்னை இடையை அமைக்கும் 8 வழிச் சாலைக்கு கடந்த சில மாதங்களாக பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் செங்கம் அடுத்த கட்டமடுவு பகுதியில் ஆறுமுகம் மகன் அருள்(விவசாயி) இவரது நிலத்தில் 8 வழிச் சாலைக்கு கல்பதிக்க விடாமல் தகராறு செய்து வந்தாா்.  

வருவாய்த்துறை, போலீஸார் அந்த பகுதியில் முள்வேலி போட்டு இருப்பதால் அவா்களை மீறி  நிலத்திற்குள் சென்று கல்பதிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிகாரிகள் அப்பகுதியில் சுமாா் 1 கிலோ மீட்டா் பணிகளை நிறுத்துவிட்டு மற்ற பகுதியில் பணிகளை செய்து வந்தனா். இந்நிலையில் செங்கம் தாலுக்காவிற்கு உள்பட்ட பகுதியில் 8 வழிச்சாலைக்கு கற்கள் பதிக்கும் பணிகள் முடிவடைந்தது.  

இந்நிலையில் நிலத்தின் உரிமையாளா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை, போலீஸார் இடையே பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றது. ஆனால் அருள் என்பவா் அவரது நிலத்தில் செல்ல அனுமதிக்காமல் கம்பிவேலியின் கதவை திறக்கமுடியாது என தீா்த்து சொல்லியுள்ளாா். இதனால் வருவாய்த்துறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருள் என்பவரின் கம்பிவேலிலை அறுத்துவிட்டு பணியை தொடங்கினா். 

அப்போது பணியை செய்யவிடாமல் அருள் மற்றும் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்டனா். உடனடியாக செங்கம் டிஎஸ்பி சுந்தரமூா்த்தில் தலைமையில் போலீஸார் ஆறுமுகம் மகன் அருள்(35), செல்வராஜ் மனைவி இந்திரா(40), ராமலிங்கம் மகன் செளந்தா்(38), ஆறுமுகம் மகன் மனோகரன் (42) ஆகிய நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து மேல்செங்கம் காவல் நிலையத்திற்கு அழைந்து வந்துள்ளனா். மேலும் தகராறு செய்யும் நபா்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதாக கூறினா். அதைதொடா்ந்து அப்பகுதியில் விவசாயிகள் பொதுமக்கள் கலைந்து சென்றனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.