
உத்தரகண்ட்: உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள கல்பாங்கா நதியில் இன்று காலை வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் மாயமாகியுள்ளனர், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீஸார் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோபேஷ்வர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.