நிதி ஆயோக் மாநாடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15-ம் தேதி தில்லி பயணம்

வரும் ஜூன் 16 அன்று தில்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக
நிதி ஆயோக் மாநாடு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15-ம் தேதி தில்லி பயணம்
Updated on
1 min read

வரும் ஜூன் 16 அன்று தில்லியில் நிதி ஆயோக் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 15-ம் தேதி தில்லி செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அப்போது பிரதமர் மோடியைச் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து மத்திய அரசு ஆணையத்தை அமைத்து நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கு பிரதமர் மோடியை சந்தித்து நேரில் நன்றி சொல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். மேலும் ஜூன் 16-ம் தேதி நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் மத்திய அரசின் புதிய செயல் திட்டங்களை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com