தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கோவா மின்துறை அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி

அலுவல் விஷயமாக மும்பை சென்ற கோவா மின்துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர் நெஞ்சுவலி காரணமாக

News image
Updated On :5 ஜூன் 2018, 10:45 am

DIN

மும்பை:  அலுவல் விஷயமாக மும்பை சென்ற கோவா மின்துறை அமைச்சர் பாண்டுரங் மட்கைகர் நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வட கோவாவில் உள்ள கும்பார்ஜூவா தொகுதி எம்எல்ஏவான பாண்டுரங் நேற்று மதியம் மும்பை சென்றார். அங்கு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இது குறித்து கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஷ்வஜித் ரானே கூறுகையில், “அமைச்சர் பாண்டுரங் நெஞ்சுவலி காரணமாக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு விவரங்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை”  என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.