இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

உலகக்கோப்பை கால்பந்து நடைபெறும் மைதானங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு: அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு

News image
Updated On :16 ஜூன் 2018, 9:03 am

DIN

வாஷிங்டன்: ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடைபெறும் மைதானங்களைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.  

உலகம் முழுவதும் எதிர்பார்த்து கொண்டிருந்த பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தப் போட்டிகள் அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. 

இந்நிலையில், போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து மைதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தபட்டுள்ளன.

மேலும், மாஸ்கோ நகரம் முழுவதும் மிகப்பெரும் அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும், விளையாட்டு அரங்கம், ரசிகர்கள் ஒன்று கூடும் பகுதிகள், சுற்றுலாத் தளங்கள், போக்குவரத்து நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகக் கோப்பை போன்ற பெரிய அளிவிலான சர்வதேச நிகழ்ச்சிகள், தீவிரவாதிகளுக்கு கவர்ச்சிகரமான இலக்காக உள்ளன என்று தெரிவித்துள்ளது. 

தீவிரவாத அச்சுறுத்தலை அடுத்து, ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை அமெரிக்கர்கள் மறுபரிசீலனை செய்யுமாறும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்கும் மாறும் அமெரிக்கர்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.