தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது: தமிழக அரசு அறிக்கை

தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 47 போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில்

News image
Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST


சென்னை: தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 47 போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும் நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடக்கிறது என்று பேரவையில் வெளியிடப்பட்ட அரசின் கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. 

அதன்படி தமிழகத்தில் தினமும் 47 போராட்டங்கள் நடைபெறுகிறது. நாடு முழுவதும் நடைபெறக்கூடிய போராட்டங்களில் 15 சதவீதம் தமிழகத்தில் நடக்கிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் பலப்பிரயோகம் செய்வது தமிழகத்தில் குறைவு. மற்ற மாநிலங்களில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடக்கிறது. 
ஆனால், தமிழகத்தில் லத்தி தாக்குதலும், கண்ணீர் புகை குண்டுகளும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதன்படி இந்திய அளவில் தமிழகத்தில் 0.5 சதவீதம் மட்டுமே பலப்பிரயோகம் நடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. 

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அடிக்கடி போராட்டம் நடக்கிறது. மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீத்தேன் போராட்டம், ஹைட்ரோ கார்பன் போராட்டம், காவிரி போராட்டம், ஐபிஎல் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், சாகர் மாலா போராட்டம், இப்போது சேலம் போராட்டம் என்று வரிசையாக மக்கள் தங்கள் சுயஉரிமைக்காக போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 100 நாள் அமைதியாக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தி, 13 பேர் கொலை செய்யப்பட்ட கொடூரமும் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.