

லோக்பால் தேர்வுக் குழு கூட்டத்தை புறக்கணிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.
லோக்பால் அமைப்பின் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக விவாதிப்பதற்கான லோக்பால் தேர்வுக் குழுக் கூட்டம் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான மல்லிகார்ஜூன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், ‘லோக்பால் தொடர்பாக மத்திய அரசு நடத்தும் தேர்வு குழு கூட்டமானது, எதிர்கட்சியினரும் பங்கேற்றனர் என்பதை தெரிவிக்கும் ஒரு கண்துடைப்பு நாடகம் போல் தோன்றுகிறது. எனவே இந்த கூட்டத்தில் நான் பங்கேற்க போவதில்லை’ என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.