தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மகாராஷ்டிராவில் ரசாயன தொழிற்சாலை தீ: மீட்புப் பணிகள்  தீவிரம்

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தராப்பூர் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.டி.சி.)அமைந்துள்ள பகுதியில் உள்ள

News image
Updated On :9 மார்ச் 2018, 3:25 am

DIN

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் தராப்பூர் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (எம்.டி.சி.)அமைந்துள்ள பகுதியில் உள்ள ரசயான தொழிற்சாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

பால்கர் மாவட்டம் தராப்பூர் பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று வியாழக்கிழமை இரவு திடீரென தீ பிடித்தது. தீ விபத்தில் தொழிற்சாலையில் பணியில் இருந்த 5 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளான இடத்திற்கு வந்த பால்கர் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நர்னாரே செய்தியாளர்களிடம் கூறுகையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன. 

தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையைச் சார்ந்த எந்திரங்கள் மற்றும் சுகாதாரத் துறை எந்திரங்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டும் வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அனைவரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தங்களது சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். ஓரளவிற்கு தீயை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 7 தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறினார். 

தீ விபத்தில் அருகில் உள்ள 2 தொழிற்சாலைகள் தீப்பிடித்துள்ளதாகவும், பல தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் தீ விபத்தில் சிக்கி தவித்து வருவதாக கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.