12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பெங்களூரு விமான நிலைய ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்துக்குள்ளானது ஸ்பைஸ்ஜெட் விமானம்!

பெங்களூரு விமான நிலையத்தில் தனியார் நிறுவன ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி

Published On :

பெங்களூரு விமான நிலையத்தில் தனியார் நிறுவன ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்தில் சிக்கியதாவும், அனைவரும் அதிரிஷ்டவசமாக எந்தவித சேதாரமும் இல்லாமல் உயிர்தப்பினர் என தகவல் வெளியாகி உள்ளது.  

ஹைதராபாத்தில் இருந்து பெங்களூரு கெம்பெகௌடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த தனியார் ஸ்பைஸ்ஜெட் SG 1238 விமானம் தரையிறங்கியது. பின்னர் ஓடுபாதையில் செல்லும் போது நான்கு ஓடுபாதை விளக்குகளில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதனால் 40 நிமிடங்கள் ஓடுபாதை செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சரிசெய்யப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த ஓடு பாதை மூடப்பட்டதால், இந்த விமான நிலையத்திற்கு வரும் சுமார் 10 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதில் சென்னைக்கு எட்டு விமானங்களும், திருச்சி மற்றும் கோவைக்கு தலா ஒரு விமானமும் திருப்பி விடப்பட்டது.

மேலும் இந்த விபத்தினால் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு எந்தவித காயம் மற்றும் சேதம் ஏற்படவில்லை என ஸ்பைஸ்ஜெட் விமான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.