இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்; டிரம்ப், மே கண்டனம்

வாஷிங்டன்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அரசுக்கு ஆதரவாக ஈரானிய படைகள் செயல்பட்டு வருகின்றன.

சமீபத்தில் ஈரான் நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது.  

இந்நிலையில் ஈரான் அரசு சிரியாவில் இருந்து தனது எதிரி நாடான இஸ்ரேல் மீது ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது.  ஏறக்குறைய 20 ஏவுகணைகளை கொண்டு கோலன் பகுதியிலுள்ள இஸ்ரேலிய நிலைகள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அவற்றில் சில ஏவுகணைகளை இஸ்ரேல் வழிமறித்து அழித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com