மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: காந்தி நினைவிடத்தில் ராகுல், சோனியா மரியாதை

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான இன்று தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்: காந்தி நினைவிடத்தில் ராகுல், சோனியா மரியாதை


புதுதில்லி: மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளான இன்று தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நம் நாட்டின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, அகிம்சை வழியில் போராடியவர் மகாத்மா காந்தி. அவரது 150-வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தி தினமாக நாடும் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

இதையடுத்து தில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

மேலும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, மகாராஷ்டிர மாநிலம் வார்தா அருகேயுள்ள சேவா கிராமம் ஆசிரமத்தில் இன்று காரியக் கமிட்டி கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

காரியக் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மகாத்மாவின் கொள்கைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மகாத்மா காந்தியை நினைவுகூரும் வகையில் பிரார்த்தனை, அமைதி பேரணி நடைபெறும். ராகுல் காந்தியும் உரையாற்ற இருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com