இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்: மெகபூபா முஃப்தி கண்டனம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு மக்கள் ஜனநாயக
இன்றைய நாள் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்: மெகபூபா முஃப்தி கண்டனம்
Updated on
1 min read


ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் அமைப்பின் 370வது மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வவருமான மெகபூபா முஃப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கண்டன அறிக்கையில்,  ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வரும் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்றும், அரசியலமைப்புக்கு எதிரானது.

இதன் மூலம் மத்திய அரசின் நோக்கம் தெளிவானதாக தெரிவித்துள்ள மெகபூபா முஃப்தி, மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மக்களை அச்சுறுத்த நினைப்பதாகவும், இந்த நடவடிக்கை இந்திய துணைக் கண்டத்தில் பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com