கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே மூன்று முறை முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்ததாக ஒருவரை கேரள போலீஸார் இன்று வெள்ளிக்கிழமை (ஆக 16) கைது செய்துள்ளனர். முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தென் மாநிலத்தில் நடந்த முதல் கைது இதுவாகும்.
இதுதொடர்பாக கோழிக்கோடு அருகே முக்கோம் காவல் நிலை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இ.கே. ஹூசாம்(34) என்பவர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தனது மனைவியிடம் மூன்று முறை 'தலாக்' என்று கூறி விவகாரத்து செய்துள்ளார்.
பின்னர் ஹூசாமின் மனைவி நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் ஹூசாம் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்திருந்தது.
தாமராசேரி நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவின் பேரில் இன்று வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 16) ஹூசாம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக போலீஸ் அதிகாரி கூறினார். முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 2019-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஹூசாம் கைது செய்யப்பட்டது தென் மாநிலத்தில் நடந்த முதல் கைது இதுவாகும்.
முத்தலாக் தடை சட்டத்தை மீறி மனைவிக்கு முத்தலாக் கூறி விவகாரத்து செய்த கணவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
முஸ்லிம் சமூகத்தில் தொடர்ந்து மூன்று முறை தலாக் என்று கூறி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்குத் தடை மற்றும் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 25 ஆம் தேதியும், மாநிலங்களவையில் ஜூலை 30 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. எனினும், முத்தலாக் கூறி பெண்ணை விவாகரத்து செய்வது தொடர்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வா? இபிஎஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்!

கடந்த 5 நிதியாண்டுகளில் 6,255 கிளைகளை திறந்த பொதுத்துறை வங்கிகள்!

RSS கொள்கையில் அமைச்சர் நிர்மல் குமார்! திமுக MLA பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்கள்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech



