வாணியம்பாடி: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகனும் திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
வாணியம்பாடியில் இன்று அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், முத்தலாக் தடை சட்ட மசோதா மூலம் அனைத்து பெண்களும் சம உரிமை பெற வேண்டும் என்பதே இலக்கு. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடுதான் இப்போதும் உள்ளது என்றார்.
மேலும், வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும். திமுகவில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. துரைமுருகனின் மகன் வெற்றிபெறக்கூடாது என உதயநிதி ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேக்கேதாட்டு பிரச்னை... அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக! - கம்யூனிஸ்ட் வேண்டுகோள்
இந்தியாவின் மின்னல் வேக மனிதர்! தேசிய சாதனையை முறியடித்த குரிந்தர்வீர் சிங்!

வீர வசனங்கள் பேசிய முதல்வர் விஜய் வாய்திறக்க மறுப்பது ஏன்? - உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காத்திருந்து சிறுவனை கொலை செய்தது ஏன்? - விளக்குத்தூண் காவல்துறை விசாரணை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



