காத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்!

2 நாள் இந்திய பயணத்தை முடித்து கொண்டு சென்னையில் இருந்து சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாள தலைநகர் காத்மாண்டு
காத்மாண்டு சென்றடைந்தார் சீன அதிபர் ஷி ஜின்பிங்!
Updated on
1 min read


காத்மாண்டு: 2 நாள் இந்திய பயணத்தை முடித்து கொண்டு சென்னையில் இருந்து சென்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாள தலைநகர் காத்மாண்டு சென்றடைந்தார்.

முறைசாரா பேச்சுவார்த்தைகளாக இந்தியாவிறகு 2 நாள் பயணமாக வந்திருந்த சீன அதிபர் ஷி ஜின்பிங், தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டு சென்னையில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில் நேபாளம் புறப்பட்டார். 

நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உளஅள திருபுவன் விமானநிலைத்திற்கு 4.30 மணிக்கு சென்றடைந்தார். 

திருபுவன் விமான நிலையத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதமர் கே.பி.ஷர்மா மற்றும் அந்நாட்டு அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இருநாட்டு தலைவர்களும் ஷூடல் நிவாஸில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

Nepal: Chinese President Xi Jinping arrives in Kathmandu, he was received by Nepal President Bidhya Devi Bhandari.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com