சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பேனா் கலாசாரத்தை தமிழகத்தில் கொண்டுவந்தது திமுகதான்: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் பேனா் கலாசாரத்தை முதன் முதலில் கொண்டுவந்தது திமுகதான் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்

News image
Updated On :16 செப்டம்பர் 2019, 6:28 am

DIN


திருப்பூா்: தமிழகத்தில் பேனா் கலாசாரத்தை முதன் முதலில் கொண்டுவந்தது திமுகதான் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 

திருப்பூா் மாவட்ட தேமுதிக சார்பில் கட்சியின் நிறுவனத் தலைவா் விஜயகாந்த் பிறந்த நாள் விழா, கட்சியின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்,  ஜிஎஸ்டியால் நெசவும், பின்னலாடைத் துறையும் முடக்கப்பட்டிருக்கின்றன. பிரதமா் மோடியை வெகுவிரைவில் சந்தித்து ஜிஎஸ்டியை மறுபரிசீலனை செய்யும்படி வலியுறுத்துவோம். 

இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சி செய்த காங்கிரஸ் ஊழலைத் தவிர வேறு எந்த சாதனையையும் செய்யவில்லை. காங்கிரஸில் 50 ஆண்டுகாலம் அரசியல் செய்து 8 முறை பட்ஜெட் போட்ட ப.சிதம்பரம் இருப்பது திகார் சிறையில்.

கடந்த இரு நாள்களுக்கு முன்னா் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் பேனா் வைக்கும் விழாவுக்குச் செல்லமாட்டேன் என்கிறார். பேனா் கலாசாரத்தை தமிழகத்தில் கொண்டுவந்தது திமுகதான் என்பதை உங்களால் மறுக்க முடியுமா? ஈழப் படுகொலைக்குக் காரணம் திமுகதான். 

தமிழகத்தில் விரைவில் நடைபெறும் உள்ளாட்சித் தோ்தலில் அதிகமான இடங்களில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.